சாதுரியமான குறுக்கு வழியில் வெற்றி பெறுவதை விட நிதாமான அறவழியில் வெற்றி பெறுவது சிறந்தது.

- நா. பார்த்தசாரதி (சிந்தனை மேடை)
அற்ப மனிதர்களுடன் பேச்சுச் சல்லாபம் வைத்துக் கொள்வதைக் காட்டிலும் மௌன விரதம் மேலானது. 


- வ.ரா (மகாகவி பாரதி)

தந்திரத்தால் ஏமாற்ற முயற்சி செய்யாதே; எப்போதும் நேர்மையாகவே தற்காப்பு தேடிக்கொள். தந்திரத்தை நீ கையாண்டால், உன்னைவிட வல்லவர்களின் தந்திரத்திற்கு பலியாகிவிடுவாய்.

- மு. வரதராசன் (கள்ளோ ? காவியமோ)
மனிதனுக்கு தருமசங்கட நிலைமை ஏற்படுவது என்றால், இப்படித்தான் ஏற்படும். கடமை, இரண்டு அம்சங்களாகக் கண்ணில் தோன்றும். அவை ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை போலவும் தோன்றும். எதைத் தள்ளுவது, எதைக் கொள்ளுவது என்பதில் தான் தருமசங்கடம்.

- வ.ரா (மகாகவி பாரதி)

மனிதன் ஆபத்தினால் அநேகமாய் சாவதில்லை. ஆபத்து வருமே என்று எண்ணியெண்ணி, ஆபத்து வருவதற்கு முன்னே முக்கால் பங்கு இறந்து போய் விடுகிறான்.


- வ.ரா (மகாகவி பாரதி)